Tuesday, April 24, 2012

கனவு

கண்முன்னே காட்சிகள் ஓடுகின்றன... நான் திகைபடைகின்றேன். என்கீருகின்றேன்? என்ன செய்து கொண்டிருகின்றேன்? தெரியவில்லை.சிறுது நேரத்தில் கேள்விகள் மறைந்து போயின.. மெதுவாக காட்சிகளை நம்ப தொடுங்குகின்றேன், காட்சிகளோடு ஒன்றினைகிறேன் , செயல்பட துவங்குகின்றேன்.

படத்தை இடையில் இருந்து பார்க்கின்ற மாதிரி ஒரு உணர்வு. சுற்றி நடக்கும் காட்சிகள் இடை விடாது தொடர்கின்றன. இது கனவு அல்ல என்பதை போல் இடை விடாத தொடர்ச்சி. நிறுத்தி நிதானிக்க நேரமில்லை.. செயல் படுகின்றேன். காட்சிகள் மாற மாற செயல் படுகின்றேன்.

கனவினில் அழுகின்றேன், சிரிகின்றேன். தோல்வி வருகின்றது - துவண்டு போகின்றேன்,வெற்றி வருகின்றது - மகிழ்ச்சி அடைகிறேன். காட்சிகோளோடு போராடுகின்றேன்,அல்லல் படுகின்றேன். இது கனவு என்று தெரிந்தால் கனவு இவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா? தெரியாது. ஆனால் இது கனவு என்று தெரியாததால் எவ்வளவு போராட்டம்? கனவினில் எனது பிம்பத்தை காக்க போராட்டம்.



Abstract Faces


சிரிப்பு,அழுகை, மகிழ்ச்சி,துக்கம்,தைரியம்,பயம் சுழல்கின்றது.. நானும் கனவோடு சுழல்கின்றேன்.. நடுவில் சிறுது தயக்கம்.. இது கனவா என்ற சின்ன ஐயம் ... ஒன்றிரண்டு பேர் ஆம் என்கிறார்கள். விழித்திரு கனவு கலையும் என்கிறர்கள். நான் எப்படி விழிப்பது என்கிறேன்? புரியவைப்பது கடினமாய் இருகின்றது. கனவுக்குள் இது கனவு என்று புரிய வைப்பது கடினம் தான்.

சில சமயம் தூக்கம் கலையும் ஒரு உணர்வு. விடியல் சத்தங்கள் காதில் மெலிதாய் கேட்கின்றது .. கனவும் தொடர்கின்றது.. விழிக்க எத்தனிகபதுற்குள் கனவு காட்சிகள் மனதை அகார்மிக்கின்றன. விழிக்க மனமில்லை.. மிண்டும் கனவினில் அழுகின்றேன் சிரிகின்றேன்

காட்சிகள் தொடர்ந்து மாறுகின்றேன் .. நானும் கனவோடு சுழல்கின்றேன்..

கலையுமா எனுடைய கனவு?

No comments:

Post a Comment